மறைமுகத் தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல எனக் கூறி திருமாவளவனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
‘மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடையில்லை. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தேவைப்பட்டால் மனுதாரர் அங்கு செல்லலாம்’ என நீதிபதிகள் கூறினர்.