சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரையானது இம்முறை நாளை 11ஆம் திகதி புதன்கிழமையன்று உந்துவப் பூரண தினத்தன்று ஆரம்பமாகிறது.
இதனை முன்னிட்டு சிவனொளிபாதமலை அடிவாரமான நல்லதண்ணீர் நகரிலிருந்து மலை உச்சி வரையிலான பாதைகள் சுத்தப்படுத்தல், படிகள் சீர்திருத்தல், மின் இணைப்பு, மின் குமிழ் இணைத்தல் போன்ற பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நல்லதண்ணீர் நகரத்தில் பொலிஸ் நிலையம் மற்றும் மேலதிகமாக சீத்தக்குல, ஊசிமலை, மலையுச்சி ஆகிய இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் அமைத்தல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் புகையிரத மார்க்கமாக வருகை தரும் யாத்திரிகர்கள் நலன் கருதி அட்டன் புகையிரத நிலையத்திலிருந்து நல்ல தண்ணீர் நகரம் வரை விசேட பஸ் சேவை மேற்கொள்ளப்படுவதன் மூலம் புகையிரத, பஸ் தொடர் பயணச்சேவை துரிதமாக்கப்படவுள்ளது. நேற்று அதிகாலை முதல் இன்று வரை சமன்தேவ உருவச்சிலை தேவ ஆபரண, உபகரணங்கள், பெல்மதுளையின் சிவனொளிபாத மலையில் கல்பொத்தாவெல ரஜமகா விகாரையில் அடியார்களின் பூஜை, வழிபாடுகளுக்காக வைக்கப்படும். தொடர்ந்து இன்றுதேவ உருவச்சிலை, ஆபரணங்கள், உபகரணங்கள் என்பன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
பெல்மதுல்லை, இரத்தினபுரி, குருவிட்ட, எகலியகொடை, அவிசாவளை, தெஹியோவிட்ட, கரவனல்ல, எட்டியாந்தோட்டை, அம்பகமுவ, அட்டன், மஸ்கெலியா, நல்லதண்ணீர் ஆகிய நகரங்களை ஊடறுத்து புறப்பட்டு வரும் ஊர்வலம் நாளை உந்து வப் பூரண தினமன்று மலை உச்சியை அடைந்ததும் ஊர்வலம் நிறைவுறும்.