களனி கங்கையில் நீராடசென்ற இளைஞன் சடலமாக மீட்பு

192 0

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேன களனி கங்கையில் நீராட சென்ற இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் நேற்று (08) மாலை 06 மணியளவில் சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கபட்ட பலாங்கொட உடகம அம்பேரல்ல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய மகேஸ்குமார் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கினிகத்தேன பகுதியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்ததாக கினிகத்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இளைஞரின் சடலம் கினிகத்தேன வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.