ஆளுனர் பதவிக்கு இருவரின் பெயர்கள்

1868 0

BUP_DFT_DFT-156இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு, இரண்டு பேரின் பெயர்கள் குறித்த இறுதிகட்ட ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, மத்திய வங்கியின் சிரேஷ்ட்ட அதிகாரி ஒருவர் தொடர்பிலும், நிதித்துறை சார்ந்த சிரேஷ்ட்ட பேராசிரியர் ஒருவர் தொடர்பிலுமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னரே, மத்திய வங்கியின் புதிய தலைவர் யாரென்று அறிவிக்கப்படும்.

இது தொடர்பில் நேற்றையதினமும் அவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment