அரச பாடசாலைகளுக்கு 3 ஆம் தவணை விடுமுறை இன்று

195 0

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்கான விடுமுறை இன்று வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை  கல்விப் பொதுத்தர சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்று 29 ஆம் திகதி 3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர்களே வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.