துரிதகதியில் நாட்டினை கட்டியெழுப்புவோம் – பிரதமர் மஹிந்த உறுதி

333 0

கோத்­தபா­ய ராஜபக்ஷ தலை­மை­யி­லான எமது அர­சாங்­கத்தில் நாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை ஒரு­போதும் மீற­மாட்டோம். மக்கள் எம்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கை­யையும் எதிர்­பார்ப்­பையும் காப்­பாற்­றுவோம் என்று பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

நாட்டில் பொரு­ளா­தார சவால் கள் நிறைந்­துள்ள நிலையில் நிதி அமைச்­சினை என்­னிடம் கொடுத்­துள்­ளனர். துரி­த­க­தியில்  நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நிதி அமைச்சின் கட­மை­களை பொறுப்­பேற்ற பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே    இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இந்த நாட்டில் நிதி அமைச்­ச­ராக நான் பத­வி­யேற்கும் நான்­கா­வது சந்­தர்ப்பம் இது­வாகும். நான் நிதி அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் பல சவால்­க­ளுக்கு  முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. ஆனால் எனது கட­மையை நான் சரி­யாக அப்­போ­தெல்லாம் செய்து முடித்தேன். இப்­போதும் நாட்டில் பாரிய சவால்கள் நெருக்­க­டிகள் இருக்­கின்ற நிலை­யி­லேயே நிதி அமைச்சு என்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய வங்கி ஆளுநர் கூறும் வகையில் இன்று நாட்டில் பொரு­ளா­தாரம் பாரிய வீழ்ச்சி கண்­டுள்­ளது. வீழ்ச்சி  கண்­டுள்ள  எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை உட­ன­டி­யாக மீட்­டெ­டுக்க வேண்டும் என்றும்  மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும் எனவும்   மக்கள் எம்­மிடம் எதிர்­பார்க்­கின்­றனர். ஆகவே அவ்­வா­றான விரைந்த வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­துடன் மக்கள் உண­ரக்­கூ­டிய வேலைத்­திட்­டமும், முத­லீட்­டா­ளர்கள் எம்­மீது நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதி­கா­ரி­களை நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு அழைக்கும் என்ற அச்­சமே இன்று மத்­திய வங்கி அதி­கா­ரி­க­ளிடம் உள்­ளது. ஆனால் இந்த நிலை­மை­களை நிறுத்த சட்ட வரை­பொன்றை கொண்­டு­வந்­தேனும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொரு­ளா­தார கொள்கை ஒன்­றினை உரு­வாக்க வேண்­டிய காலம் வந்­துள்­ளது. அவ்­வாறு ஒரு உறு­தி­யான கொள்­கையை உரு­வாக்­கினால் மட்­டுமே பொரு­ளா­தாரம் மீதான நம்­பிகை எழும், முத­லீ­டுகள் மீண்டும் குவியும்.

இப்­போது நிலவும் பல­வீ­ன­மான பொரு­ளா­தார கொள்­கைக்கு பதி­லாக ஆரோக்­கி­ய­மான நம்­பிக்­கை­யான பொரு­ளா­தார கொள்­கை­யொன்று உரு­வாகும். நாட்டில் வறு­மைக்­கோட்டின் கீழ் உள்ள மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் கிடைக்கும். விவ­சா­யிகள், மீன­வர்கள், தொழி­லா­ளர்கள், நடுத்­தர தொழி­லா­ளர்கள் மற்றும் உயர்­மட்ட நிறு­வ­னங்கள் மீண்டும் உயிர்ப்­பெறும் நிலை ஏற்­படும்.  வளர்ச்சி உண­ரப்­படும். இந்த நிலை­மையை உட­ன­டி­யாக உரு­வாக்­கு­வது எம் அனை­வ­ரதும் கட­மை­யாகும். இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு அதிக வாக்­கு­களை கொடுத்து வெற்­றி­பெற செய்­ததன் பிர­தான காரணம் இது­வே­யாகும்.

கடந்த 2005- 2014 ஆம் ஆண்டு வரையில் என்னால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்தில் நான் கொடுத்த வாக்­கு­று­தியை மீறா­ததை போலவே கோத்­தா­பய ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திலும் வாக்குறுதிகள் ஒருபோதும் மீறப்படாது என உறுதியாக என்னால் கூறமுடியும். கொடுத்த வாக்குறுதியை ஒருபோதும் மீறமாட்டோம். நாம் சொல்வதை செய்வோம். புதிய அரசாங்கத்தின் நோக்கம் எப்போதும் மக்களை கேந்திரப்படுத்திய பொருளாதார கொள்கையொன்றை உருவாக்குவது என்பது உறுதி என்றார்.