சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலொன்றின் பேரில் வெளிமடை பொலிசார் நேற்று இரவு குறித்த விரைந்து வீடொன்றினை சுற்றி வளைத்துச் சோதனையிட்டனர்.
இந்நிலையில் குறித்த சோதனையின் போது சட்ட விரோத 90 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த வீட்டிலிருந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
வெளிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிசாரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.