கோத்­தாபயவின் வெற்­றியில் மலை­யக மக்­களை பங்­கா­ளி­யாக்­கி­யது- இ.தொ.கா

275 0

கோத்­த­பாய ராஜபக் ஷவை மிகப் பெரிய பூச்­சாண்­டி­யாகக் காட்டி அவ­ரது வெற்­றியைத் தடுக்க முனைந்­த­வர் கள் இப்­போது தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.

இந்­நி­லையில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­யவின் வெற்­றிக்கு தோள் கொடுத்து மலை­யக மக்­களை வெற்­றியின் பங்­கா­ளர்­க­ளாக்கி இருக்­கின்­றது. இதன் மூலம் எமது மக்கள் பல்­வேறு சாதக விளை­வு­க­ளையும் பெற்றுக் கொள்­வது உறு­தி­யாகும் என்று முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

இலங்­கையின் தேர்தல் வர­லாற்றில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக கரு­தப்­பட்­டது. இத்­தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­ய­போதும் கோத்­தா­வுக்கும், சஜித்­துக்கும் இடை­யி­லேயே போட்டி நில­வி­யது. எனினும் இத்­தேர்­தலில் பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமோக வெற்றி பெற்று நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகி இருக்­கின்றார்.

இவ­ரது வெற்றி ஒரு மிகப்­பெரும் சாத­னை­யாகும். கோத்­தாவின் வெற்­றிக்கு இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் காத்­தி­ர­மான பங்­காற்றி இருக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆறு­முகன் தொண்­ட மான் கள ­நி­ல­வ­ரங்­களை  ஆராய்ந்து எடுத்த முடிவு மலை­யக மக்கள் தலை நிமிர்ந்து வாழ்­வ­தற்கு உந்­து­சக்­தி­யாகி இருக்­கின்­றது.

கோத்­த­பாய ராஜபக் ஷ யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதிப் பூங்­காற்று வீசு­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்­தி­ருக்­கின்றார். ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கின் றார். யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் ஊடாக நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கும், அபி­வி­ருத்­திக்கும் அவர் வித்­திட்­டி­ருக்­கின்றார். இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்­கு­ரிய சகல தகு­திகளும் அவ­ருக்கு இருக்­கின்­றன. அவர் செயல் வீர­ராக விளங்­கு­கின்றார். அவ­ரது சிந்­தனை மற்றும் செயற்­பாடு தொடர்பில் ஆறு­முகன் தொண்­ட­மானும், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் அதி­க­ளவில் நம்­பிக்கை கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அல்­லது ஐ.தே.க.வை ஆத­ரிக்கும் மலை­யக அர­சி­யல்­வா­திகள் கோத்­த­பாய ராஜபக் ஷவை பல்­வேறு வித­மாக விமர்­சித்து வந்­தனர். கோத்­த­பா­யவை மிகப்­பெரும் பூச்­சாண்­டி­யாகக் காண்­பித்து அவ­ரது வாக்­கை தடுக்க முயன்­றனர். எனினும் இது சாத்­தி­ய­மா­காத நிலையில் இப்­போது கோத்­தாவை விமர்­சித்­த­வர்கள் தோல்வி கண்­டுள்­ளனர். நல்ல ஒரு பாட­மாக அவர்­க­ளுக்கு அமைந்­தி­ருக்­கின்­றது. தனது அர­சியல் இருப்பை தக்க வைத்துக் கொள்­ளவும், சுய­நலன் கரு­தியும் செயற்­பட்­ட­வர்கள் இப்­போது மண்­ கவ்­வி­யுள்­ளனர். மக்கள் நலன் கருதி செயற்­ப­டா­த­வர்கள் தூக்கி எறி­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். ஏனை­யோ­ருக்கு இது ஒரு பாட­மாகும்.

கோத்­த­பா­யவின் தலை­மையில் நாடு பல்­வேறு நன்­மை­க­ளையும் பெற்றுக் கொள்ளும். நாட்டின் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மேலோங்கும். சிறு­பான்மை மக்கள் பல்வேறு வழிகளிலும் நன்மையடைவர். மலையக மக்களின் அபிவிருத்தியும் மேம்படும். இ.தொ.கா. 32 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோத்தபாய ராஜபக் ஷ பூரண ஒத்துழைப்பை வழங்குவார். கோத்தவின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இ.தொ.கா. தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.