2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில் இன்று காலை நேர நிலைவரத்தின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிக்கின்றார்.
வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளின் படி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலைபெற்றுள்ளார்.
குறிப்பாக வெளியாகிய தேர்தல் தொகுதி முடிவுகளின் படி யாழ் மாவட்ட தேர்தல் தொகுதி முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸ அதிகூடிய வாக்குகளைப்பெற்று முன்னிலைபெற்றுள்ளார்.
இன்று (17.11.2019 ) காலை 7 மணி வரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 6 இலட்சத்து 91 ஆயிரத்து 998 வாக்குகளைப்பெற்று 51.56 வீதத்தின் அடிப்படையில் முன்னிலையிலுள்ளார்.
இதேவேளை, அவருக்கு போட்டியாகவுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 5 இலட்சத்து 49 ஆயிரத்து 151 வாக்குகளைப்பெற்று 40.92 வீதத்தின் அடிப்படையில் உள்ளார்.
இந்நிலையில் ஆரம்பத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலை வகித்த போதிலும் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது.