பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தியில்லை- எஸ்.ரஜீவன்(காணொளி)

404 0

 

sequence-02-still047யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பு முழுமையாக திருப்தி கொள்ள முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவ சங்கத்தின் தலைவர் எஸ்.ரஜீவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும்-யாழ் பல்கலைக்கழகத்தினருக்குமிடையில் சந்திப்பு(காணாளி)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பில் இன்று ஜனாதிபதிக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினருக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று பிற்பகல் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.