11ஆம் திகதி விசேட பாரா­ளு­மன்ற அமர்வு

194 0

விளை­யாட்­டுக்கள் தொடர்­பான தவ­று­களைத் தடுத்தல்’ சட்­ட­மூ­லத்தை விரைவில் நிறை­வேற்ற வேண்டும் என்ற கார­ணத்தை அடிப்­ப­டை­யாக வைத்து நவம்பர் 11 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  முற்­பகல் 11.30 மணிக்கு விசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நிலை­யியற் கட்­டளை இலக்கம் 16ற்கு அமைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்க எதிர்­வரும் நவம்பர் 11 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  முற்­பகல் 11.30 மணிக்கு விசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நேற்று பிற்­பகல் கூடிய பாரா­ளு­மன்ற அலு­வல்கள் பற்­றிய குழுக் கூட்­டத்தில் இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இதற்­க­மைய அன்­றைய தினம் ‘விளை­யாட்­டுக்கள் தொடர்­பான தவ­று­களைத் தடுத்தல்’ சட்­ட­மூலம் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

அத்­துடன் தேசிய புத்­தாக்க முக­வ­ராண்மைச் சட்­ட­மூ­லத்தை இரண்­டா­வது மதிப்­பீட்­டுக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கும் பாரா­ளு­மன்ற அலு­வல்கள் பற்­றிய குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இடம்­பெறும் அமர்வின் பின்னர் எதிர்­வரும் டிசம்பர் 03ஆம் திக­தியே பாரா­ளு­மன்றம் மீண்டும் கூட­வுள்­ளது.

நேற்று சபையில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ  ‘விளை­யாட்­டுக்கள் தொடர்­பான தவ­று­களைத் தடுத்தல்’ சட்­ட­மூ­லத்தை விரைவில் நிறை­வேற்ற வேண்டும் என தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­திய நிலையில் விசேட தன்­மை­களை கருத்தில் கொண்டு இந்த சட்­டத்தை நிறை­வேற்ற சபையில் ஆளும் கட்சி மட்­டு­மல்­லாது எதிர்க்­கட்­சி­க­ளான மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் மஹிந்த அணி­யி­ன­ராக செயற்­படும் சக­லரும் தமது ஆத­ரவை தெரி­வித்­தனர்.

அதற்­க­மைய அவ­ச­ர­மாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நேற்று பிற்­பகல்  பாரா­ளு­மன்ற அலு­வல்கள் பற்­றிய குழுக்­கூட்டம் கூடி­யது. இதன்­போதே அவ­ச­ர­மாக எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை மீண்டும் பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதியே வழைமையான பாராளுமன்ற அமைர்வுக்கான திகதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.