மிலேனியம் சாவல் ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டால் ஏனைய தரப்பினரையும் இணைத்துக் கொண்டு நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.
உத்தேச ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு தெளிவு படுத்தப்படவில்லை. பாராளுமன்றத்திற்கு தெரியாமல் அமைச்சரவை அனுமதி வழங்கி இருப்பதானது மக்களின் விரோத செயலாகும்.
இந்த ஒப்பந்த்தின்படி நாட்டில் உள்ள பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.