வாழ்க்கை சுமை அதிகரித்தமையினால் நடுத்தர மக்கள் இன்று போதைப்பொருள் வியாபாரத்திற்கும், போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பண்டாரகமவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் அடிமையாகியுள்ளார்கள். இதறகு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். மக்களின் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும்போது வாழ்வதற்காக நடுத்தர மக்கள் தவறான வியாபாரங்களை புரிந்துள்ளார்கள்.
எனவே நவம்பர் 17 ஆம் திகதிக்கு பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும், போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிறந்ததாகும்.
தேசிய பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும். வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.