தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்ய தேர்தலில் போட்டியிடவில்லை-மகேஷ்

262 0

தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும்  தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், தனது கட்சியில் அரசியல்வாதிகளும் ஊழல் வாதிகலும் இல்லாதமையினால் நாட்டை மேம்படுத்துவதற்கான சகல வாய்ப்பு தனக்கு இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்பது தனது கனவு அல்ல என தெரிவித்த மகேஷ் சேனநாயக்க, நாட்டின் மக்களுக்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

அத்தோடு சிறந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுத்த அவர், நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பொறுப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தனக்கு கடந்த காலத்தில் தூதுவர், செயலக பதவிகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதுபோன்ற சலுகைகளை தான் நிராகரித்ததாகவும் சுட்டிக்காட்டிய மகேஷ் சேனநாயக்க இன்னும் சாதிக்க வேண்டியவை அதிகம் இருப்பதனால் சிவில் சமூகத்தில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.