அநீதிகள் அநியாயங்கள் இல்லாது ஒழிக்கப்பட்ட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

224 0

அநீதிகள் அநியாயங்கள் இல்லாதொழிக்கப்பட்ட இனிய தீபாவளி திருநாளாக அமைய வேண்டும் அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2019 ஆண்டிலே மலர்துள்ள இந்த தீபாவளி திருநாள் இனிய தீபாவளி திருநாளாக அமைய வேண்டும் என்றும் எம் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் இலங்கையிலே வாழும் இந்து மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் சகல செல்வங்களையும் பெற்று கடந்த காலங்களில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அநியாயங்கள் இல்லாதொழிக்கப்பட்டு, இந்த தீபாவளி திருநாள் எதிர்காலத்தில் சுபீட்சமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த நாட்டிலே வாழ்தற்கு வசதிகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.