28 ஆம் திகதி ஊவா தமிழ்பாட­சா­லை­க­ளுக்கு பூட்டு

342 0

தீபா­வளி பண்­டி­கை­யினை முன்­னிட்டு ஊவா மாகாண  தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 28ஆம் திகதி திங்­கட்­கி­ழமை விஷேட விடு­முறை நாளாக அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

 

தமி­ழர்­களின் பாரம்­ப­ரி­யத்தின் வெளிப்­பா­டாக எமது பெருந்­தோட்ட மக்­க­ளினால் வெகுவிமரி­சை­யாக கொண்­டா­டப்­ப­டு­கின்ற தீபா­வளி பண்­டி­கை­யா­னது இவ்­வ­ருடம் விடு­முறை நாளில்  கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. இதனால் எமது பெருந்­தோட்ட மாணவச் செல்­வங்­களின் விஷேட நலன்­க­ருதி 28ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­யினை விசேட விடு­முறை நாளாக அறி­விக்க வேண்டும் என ஊவா மாகாண ஆளு­ந­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளேன்.

இவ்­வி­டயம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் மைத்­திரி குண­ரத்­ன­வுடன்  கலந்­து­ரை­யா­டி­ய­தற்கு அமை­யவே பண்­டிகை தினத்­திற்கு மறுநாள் பாட­சாலை விடு­முறை தின­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.