தீபா­வளி முற்­ப­ணத்­தை­ அரசு வழங்க வேண்டும் – மஹிந்த கோரிக்கை!

299 0

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக கூறி ஏமாற்­றிய அர­சாங்கம் குறைந்­த­பட்சம் தீபா­வளி முற்­ப­ணத்­தை­யா­வது வழங்க நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டு­மென எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ச கோரிக்கை விடுத்­துள்ளார்.

 

இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரசின் ஆத­ரவு ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு கிடைத்த பின்னர் அக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் விடுத்த வேண்­டு­கோ­ளை­ய­டுத்தே இந்த கோரிக்­கையை எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ விடுத்­துள்­ள­தாக அவ­ரது அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

தொழி­லா­ள­ருக்கு சம்­பள அதி­க­ரிப்பு விட­யத்தில் அர­சாங்கம் ஏமாற்றி இழுத்­த­டிப்பு செய்­தது. 50 ரூபா கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­டு­மென கூறி அதையும் செய்­ய­வில்லை.

அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள் வான­ளாவ அதி­க­ரித்­துள்ள நிலையில் தீபா­வளி முற்­ப­ணத்­தை­யா­வது அரசு வழங்க வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன இதனை கவனத்திற் கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.