சர்வதேசம் தலையிடாது – பசில் நம்பிக்கை

290 0

இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த சர்­வ­தேச தரப்­பி­னரும் தலை­யிட முயற்­சிக்க மாட்­டார்கள். நெறி­மு­றைப்­படி அது அப்­ப­டித்தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் ‘ தி ஹிந்து’ பத்­தி­ரி­கைக்கு பேட்­டி­ய­ளித்­துள்ள அவர்,

” 2015 ஆம் ஆண்டில் நடந்த தேர்­தலில் இந்­தியா அல்­லது வேறு எந்த நாடும் அவர்­களை (எதிர்க்­கட்சி கூட்­ட­ணியை) ஆத­ரித்­தன என்­ப­தற்கு தனிப்­பட்ட முறையில் என்­னிடம் எந்த ஆதா­ரமும் இல்லை. ஆனால் என்ன தவறு நடந்­தது என்­பதை இப்­போது நாங்கள் நன்­றாக புரிந்து கொண்டோம். முன்­ன­தாக எங்கள் அர­சாங்­கத்தை மாற்ற யாரும் செயற்­பட்­டி­ருந்தால் நாங்கள் இப்­போது நிலை­மையை சரி­செய்­துள்ளோம்.

இந்­தியா எங்கள் முத­லிட நண்பர் மற்றும் அண்டை நாடு. எனவே அர­சியல் மற்றும் பாது­காப்பு விஷ­யங்­களில் நாங்கள் எப்­போதும் இந்­தி­யா­வுடன் செல்ல வேண்டும், ஆனால் பொரு­ளா­தார மற்றும் பிற விஷ­யங்­களில் நீங்கள் சீனாவை மறக்க முடி­யாது .

இலங்­கையில் சுமார் 15.99 மில்­லியன் பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்கள் உள்­ளனர். சுமார் 80% வாக்­கெ­டுப்பு நடந்தால் சுமார் 12 மில்­லியன் செல்­லு­ப­டி­யாகும் வாக்­கு­க­ளாக கரு­தப்­படும். எங்கள் இலக்கு 6.5 மில்­லியன் வாக்­குகள். வெற்றி பெற தேவை­யான 50 வீதத்தை கடந்­தாலே போதும். ஒரு உள்­ளூ­ராட்சி மன்ற வாக்­கெ­டுப்­புக்கு 40 வீத வாக்­குகள் போது­மா­ன­தாக இருந்­தது, ஆனால் ஒரு தேசிய தேர்­த­லுக்கு அது போதாது.

தேர்­தலில் தமி­ழர்­களின் வாக்­குகள் மிக முக்­கி­ய­மா­னவை . கடந்த காலங்­களில் என்ன நடந்­தது என்­பதை தமி­ழர்­களால் மறக்க முடி­யாது. ஆனால் இரு சமூ­கத்­தி­னரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிக்க வேண்டும். நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவையா என்­பதை மக்கள் தீர்­மா­னிக்­கட்டும். எமது கட்சி அதி­க­பட்ச அதி­காரப் பகிர்­வுக்கு உறு­தி­பூண்­டுள்­ளது. எங்கள் வேட்­பாளர் அல்­லது ஜனா­தி­பதி யார் என்­பது முக்­கி­ய­மல்ல, எங்கள் தலைவர் [மஹிந்த ராஜ­பக்ஷ] அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் [பிரதமராக]. எனவே, இந்த ஏற்பாடு எங்களுக்கு நன்றாக பொருந்துகிறது. அவர் எங்கள் தலைவர், அவர் நம் நாட்டின்  தலைவர் என்று தெரிவித்துள்ளார்.