சங்குகளை வைத்திருந்த இருவர் கைது !

302 0

வலம்புரிச் சங்கு உட்பட 5 கௌரி சங்குகளை தம்வசம் வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்தில்   நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த பொதி ஒன்றுடன் இருவரும் கைதாகினர்.கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அம்பாறை  மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு சென்று கைது செய்துள்ளனர்.
மாளிகைக்காட்டை சேர்ந்த  52 வயதான ஆதம்பாவா, 43 வயதான கந்தவனம் ஜீவரத்னம் ஆகியோரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை கண்டறியும் கருவி மற்றும் 625 கிராம் வலம்புரி சங்கு 1.235 கிராம் 1.505 கிராம், 675 கிராம், 515 கிராம், 1.190 கிராம் உள்ளிட்ட கோடிக்கணக்கான சங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.