நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை

285 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை (10) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நாளை காலை 10.10 மணிக்கு கொழும்பு மன்றக் கல்லூரி மண்டபத்தில் இது இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவை வழங்கும் ஒப்பந்தமும், கோட்டாபய ராஜபக்ஸவுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையுமாக இரு உடன்படிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.