சர்வதேச தபால் தினம் நாளை உலகளாவிய ரீதியில் நினைவு கூரப்படவுள்ளது.
அதனை மையமாக கொண்டு இலங்கையில் எதிர்வரும் ஒருவாரகாலப் பகுதியை தபால் வாரமான பிரகடனப்படுத்தியுள்ளதுடன், நாளை மூன்று வகையான முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரிய ரத்ன தெரிவித்தார்.
சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு நாளை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் தொடர்பிலும் தபால் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அறியத்தரும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை கூறினார்.