தவுலகல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் பொலிஸாரும் , கம்பளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அக்குரெஸ்ஸ மற்றும் மாவனெல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24-60 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.