ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள் இவர்கள் தான் !

333 0

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியானதையடுத்து 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள போதிலும் இன்றைய தினம் இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலின் பின்னர் 35 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 35 பேரும் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக இம்முறை 41 வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.  இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 16 உறுப்பினர்களும் சுயாதீன வேட்பாளர்களாக 17 பேரும்  புதிய கட்சிகளின் சார்பில் எட்டு  பேருமாக தமக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

சஜித் பிரே­ம­தாச, கோத்த­பாய ராஜ­பக்ஷ, அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, றொஹான் பள்­ளே­வத்த , வர்­ண­கு­ல­சூ­ரிய மில்ரோய்  சர்­ஜியஸ் பெர்­னாண்டோ, ஓய்­வு­பெற்ற ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்க, ஸ்ரீதுங்க ஜய­சூ­ரிய, ஸ்ரீபால அம­ர­சிங்க, சரத் மன­மேந்­திர, சம­ர­வீர வீர­வன்னி , வெலி­ச­ரகே சமன் பிர­சன்ன பெரேரா, பொல்­கம்­பல ரால­லாகே சமிந்த அநு­ருத்த , ஏ.எஸ்.பி.லிய­னகே, கெட்­ட­கொட கமகே ஜயந்த பெரேரா, துமிந்த நாக­முவ, கலா­நிதி அஜந்தா விஜே­சிங்க பெரேரா, சந்­தி­ர­சே­கர ஹேரத் ஹிட்­டி­ஹாமி கோரா­ள­லாகே சமன்ஸ்ரீ ஹேரத் , அஷோக வடி­க­மங்­காவ, ஆரி­ய­வங்ச திஸா­நா­யக்க, நம்­பு­நாம நாண­யக்­கார  அக்­மீ­மன பள்­ளி­யங்­கு­ருகே வஜி­ர­பானி விஜ­ய­ஸ்ரீ­வர்­தன, பெதெ கமகே நந்திமித்ர, அப்பரெக்க புஞ்ஞானந்த தேரர், விஜேநாயக்க கங்கானம்கே பியசிறி விஜேநாயக்க, சமல், ஜயந்த ராஜபக்ஷ, அருண டி செய்சா, ஜயந்த லியனகே, சாந்த குமார ஆனந்த வெல்கம, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பத்தரமுல்ல சீலரத்ன தேரர், இல்லியாஸ் ஜத்துரோஸ் மொஹமட், அஜந்த டி சொய்சா, அஹமட் அசான் மொஹமட் அலவி , வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சலாகே சரத் விஜித்தகுமார, வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, பிரியந்த முனிஹத் எதிரிசிங்க, நாமல் ராஜபக்ஷ, எம்.கே.சிவாஜிங்கம், மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லா, குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி, கனே ஆரச்சி மஹிபால ஹேரத், சுப்ரமணியம் குணரத்தினம் ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

இலங்கை வரலாற்றில் இல்லாதவாறு இம்முறை இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான அதாவது  41 பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணங்களை செலுத்தியிருந்த நிலையில் 35 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இரு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவை நிராகரிக்கப்பட்டு 35 வேட்பாளர்களும் இம் முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லையென்பது விசேட அம்சமாகும்.

இந்நிலையில், 67 வருடகால அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வரலாறுகாணாத பின்னடைவை சந்தித்துள்ளது. சுமார் 37 ஆண்டுகளுக்கு பின் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சி இம்முறை போட்டியிடவில்லை என்பது அதன் பின்னடைவையே காட்டுகின்றது.

கடந்த 1952 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க முதல் மைத்திரிபால சிறிசேன வரை தேர்தல்களில் சுதந்திரக்கட்சி போட்டியிட்டது.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட 35 இறுதி ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் வருமாறு,

சஜித் பிரே­ம­தாச

1967 இல் பிறந்த இவர் ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்­தவர். முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவி­னு­டைய மக­னாவார். சென்.தோமஸ் கல்­லூரி, ரோயல் கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாண­வ­ரான இவர் லண்­டனில் உள்ள மில்ஹில் பாட­சா­லையில் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர, உயர்­தர பரீட்­சை­களை பூர்த்தி செய்தார். லண்டன் பல்­கலைக்கழ­கத்தில் அர­சியல் விஞ்­ஞான துறையில் பட்டம் பெற்­றவர். அமெ­ரிக்­கா­வி­லுள்ள வெளி­நாட்டு உற­வுகள் குழுவின் கீழ் தென் தஹோட்­டாவின் குடி­ய­ரசு கட்­சியைச் சேர்ந்த செனட்டர் லரிப் பிரஸ்கர் உடன் சேர்ந்து செயன்­முறைக் கற்­கையைப் பூர்த்தி செய்­தவர். 1993 இல் இவ­ரது தந்தை கொலை செய்­யப்­பட்ட பின்னர் நாடு திரும்பி அர­சி­யலில் ஈடு­பட்டார். அம்­பாந்­தோட்டை ஐக்­கிய தேசிய கட்­சியின் மாவட்ட அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். அம்­பாந்­தோட்­டை­யி­லி­ருந்து 2000 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வானார். 2015 ஜனா­தி­பதி தேர்­தலைத் தொடர்ந்து வீட­மைப்பு, சமுர்த்தி அமைச்­ச­ராக பத­வி­யேற்றார்.

கோத்த­பாய ராஜ­பக் ஷ

1949 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்­தவர். டீ.ஏ.ராஜ­ப­க் ஷவின் புதல்­வ­ராவார். கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். இவர் 1983 இல் சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்தில் பாது­காப்பு கற்றை நெறியில் முது­மாணிப் பட்­டப்­ப­டிப்பை பூர்த்தி செய்­ தவர். 1992 இல் கொழும்பு பல்­க­லை­க்க­ழ­கத்தில் தக வல் தொழி­ல்நுட்பத் துறையில் முதுமாணி டிப்­ளோமா பட்டம் பெற்­றவர். 1971 இல் இலங்கை இரா­ணு­வத்தில் ஓர் அதி­கா­ரி­யா கச் சேர்ந்தார். 1998 இல் அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்ந்தார். கலி­போர்­னி­யா­வி­லுள்ள லோயலா சட்டக் கல்­லூ­ரியில் முறைமை நிர்­வா­கி­யாக பின்­பற்­றினார். 2005ஆம் ஆண்டு இலங்கை பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். 2010 இல் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்­திக்­கான அலு­வ­லக பொறுப்பை ஏற்றார்.

அநு­ர­கு­மார திஸா­நா­யக்க

1968 இல் பிறந்த இவர் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். தபுத்­தே­கம காமினி ஆரம்ப பாட­சாலை, தபுத்­தே­கம மத்­திய கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். 1995 இல் களனி பல்­கலைக்கழ­கத்தில் விஞ்­ஞா­னப் ­பட்­ட­தா­ரி­யாக வெளி­யே­றினார். 1998 இல் ஜே.வி.பி. சார்­பாக மாணவர் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ பட்­டதைத் தொடர்ந்து அர­சி­யலில் பிர­வே­சித்தார். 1997 இல் சோசலி மாணவர் ஒன்­றி­யத்தின் தேசிய அமைப்­பா­ள­ராக நிய­மனம் பெற்றார். 1998 இல் மத்­திய மாகா­ணத்தில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்டார். 2000 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றுக்கு தெரி­வானார். 2004 இல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அரசில் இணைந்து விவ­சாய கால்­நடை, காணி மற்றும் நீர்ப்­பா­சன அமைச்­ச­ராக பணி­யாற்­றினார். 2008 இல் பாரா­ளு­மன்ற குழு தலை­வ­ராக நிய­மனம் பெற்றார். 2010 இல் மீண்டும் தேசிய பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்­றத்­திற்கு பிர­வே­சித்தார். 2014 பெப்­ர­வரி 2 ஆம் திகதி இடம்­பெற்ற ஜே.வி.பி.யின் 7 ஆவது தேசிய மாநாட்டின் போது கட்சி தலை­வ­ராகப் பெய­ரி­டப்­பட்டார். 2015 இல் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்டார். 2015 – – 2018 பிர­தம எதிர்க்­கட்சி கொறடாவாக நிய­மனம் பெற்றார்.

 றொஹான் பள்­ளே­வத்த 

52 வய­தான இவர் ஜாதிக சங்­வர்த்­தன பெரமு­ன வைச் சேர்ந்­தவர். கடு­கஸ்­தோட்டை புனித அந்­தோ­னியார் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். ஸ்ரீ ஜயவர்த்தனபு ரவில் பட்டம் பெற்ற இவர் ஒரு சட்­டத்­த­ர­ணி­யாவார். பிரித்­தா­னி­யாவின் வோல்ட்ன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது கலா­நிதி பட்­டதைப் பெற்றுக் கொண்டார். தற்­போது லங்கா ஹானஸ் தனியார் லிமிட்­டட்டின் நிறை­வேற்று தலை­வ­ராவார். இது வாகன உதி­ரிப்­பாக தயா­ரிப்பு நிறு­வ­ன­மாகும். 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை சமூக ஜன­நா­யகக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை வகித்து வரு­கிறார்.

வர்­ண­கு­ல­சூ­ரிய மில்ரோய்  சர்­ஜியஸ் பெர்­னாண்டோ

1944 ஆம் ஆண்டு பிறந்த இவர் சுயேச்சை வேட்­பா­ள­ராவார். வென்­னப்­புவ ஜோசப்­ கல்­லூரி, புனித ஜோசப்வாஸ் கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாண­வ­ராவார். 1987 இல் சோச­லிச ஐக்­கிய முன்­னணி சார்பில் வடமேல் மாகா­ண­சபை உறுப்­பி­னாகத் தெரி­வானார். ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைந்த பின்னர் கட்சி மாறி சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்தார். 2000 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் மற்றும் மீன­பிடி சமூக வீட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்­ச­ராகக் கட­மை­யாற்­றினார். 2004 இல் மீன்­பிடி நீரியல் வள மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்­ச­ராகக் கட­மை­யாற்­றினார்.

ஓய்­வு­பெற்ற ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்க

1964 ஆம் ஆண்டு பிறந்த இவர் தேசிய மக்கள் இயக் கத்தின் சார்பில் போட்­டி­யிடுகிறார். இவர் கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். அமெ­ரிக்­காவில் இரா­ணுவ கற்கைநெறியில் தனது இள­மா­ணிப் பட்­டதைப் பெற்றுக் கொண்டார். இந்­தி­யாவின் ஜவ­கர்லால் நேரு பல்­கலைக்க­ழகத்தின் சிவில் பொறி­யியல் விஞ்­ஞானப் பட்­ட­தா­ரி­யாவார். இலங்கை இரா­ணு­வத்தில் 1981 ஒக்­டோபர் 16 முதல் இணைந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு இரா­ணுவ தள­ப­தி­யாக நிய­மனம் பெற்றார்.

ஸ்ரீதுங்க ஜய­சூ­ரிய

1947 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஐக்­கிய சோச­லிச கட்­சியைச் சேர்ந்­தவர். தனது உயர் கல்­வியை காலி – விட்­சமன் கல்­லூ­ரியில் பெற்றுக் கொண்டார். 1964 முதல் லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் உறுப்­பி­ன­ராகி அர­சி­யலில் பிர­வே­சித்தார். 1975 இல் இடம்­பெற்ற இடைத்­தேர்­தலில் ஜே.ஆர்.ஜய­வர்­த­னவை எதிர்த்து போட்­டி­யிட்டார். 1979 இல் நவ சம­ச­மாஜக் கட்­சியின் உரு­வாக்­கத்தில் தனது பங்­க­ளிப்பை வழங்­கினார். 1997 இல் ஐக்­கிய சோச­லிச கட்சி தோற்றம் பெற மூல கர்த்­தா­வாக விளங்­கினார். 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டார். சோச­லிச கட்­சியின் தற்­போ­தைய தலை­வரும் செய­லா­ளரும் ஆவார்.

ஸ்ரீபால அம­ர­சிங்க

சுயேச்சை வேட்­பாளரான இவர் மால­பே­யி­லுள்ள பூமி­ரிய மத்­திய கல்­லூரி மற்றும் இரா­குல கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். ஸ்ரீஜ­ய­வர்­த­ன­புர பல்­ கலை­க்க­ழ­கத்தில் முகா­மைத்­துவ துறை யில் தனது பட்­டத்தைப் பெற்றுக் கொண் டார். இலங்கை பட்­டயக் கணக்­காளர் நிறு­வ­னத்தில் பட்­டைய கணக்­கா­ள­ராக கட­மையாற்­றினார். 1975 இல் ஜே.வி.பியுடன் இணைந்தார். உள்­ளக நிறு­வன ஊழியர் ஒன்­றி­யத்தின் செய­லாளராகக் கட­மை­யாற்­றினார். கம்­பஹா மாவட்­டத்­தி­லி­ருந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு சார்­பாக பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வானார்.

சரத் மன­மேந்­திர

இவர் நவ சிங்­கள உறு­மயைச் சேர்ந்­தவர். அம்­பு வில் இக்­கட்­சியின் சின்­ன­மாகும். கொழும்பு இசிப்­பத்­தான கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். 1970 இல் அர­சி­ய­லுக்குள் பிர­வே­சித்தார். 1980 இல் கொழும்பு வடக்கு தேர்தல் தொகு­தியின் ஐக்­கிய தேசிய கட்­சியின் இளைஞர் அமைப்­பா­ள­ராகச் செயற்­பட்டார். 2006 இல் நவ சிங்­கள உறு­மய தோற்­றத்­துக்கு தனது பங்­க­ளிப்பை வழங்கி பிய­கம தேர்தல் தொகு­தியின் பிர­தம அமைப்­பா­ள­ராக செயற்­பட்டார். 2010 ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

சம­ர­வீர வீர­வன்னி 

1943 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு சுயேச்சை வேட்­பா­ள­ராவார். பண்­டார­ வளை புனித ஜோசப் கல்­லூரி, ஹாலி­யெல ஸ்ரீசு­தர்­ம­வாச பிரி­வி­னாவின் பழைய மாண­வ­ராவார். விய­லுவ தேர்தல் தொகு­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக 1970ஆம் ஆண்டு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். 1980 இல் பிரதி கல்வி அமைச்­ச­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். 1989 இல் பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­ச­ராகப் பெய­ரி­டப்­பட்டார். 1999 ஏப்ரல் முதல் 2001 ஒக்­டோபர் வரை ஊவா மாகாண முத­ல­மைச்­ச­ராக பதவி வகித்தார்.

பொல்­கம்­பல ரால­லாகே சமிந்த அநு­ருத்த 

1972 ஆம் ஆண்டு பிறந்த இவர் சுயேச்சை வேட்­பா­ள­ராவார். ருவன்வெல மகா வித்­தி­யா­ல­யத்தின் பழைய மாண­வ­ராவார். ஜே.வி.பி சார்பில் சப்­ர­க­முவ மாகாண சபைக்கு 2000 ஆம் ஆண்டு உறுப்­பி­ன­ராகத் தெரி­வானார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் 2004 இல் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா னார். 2015 இல் சுயேச்­சை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

ஏ.எஸ்.பி.லிய­னகே

இலங்கை தொழி­லாளர் கட்­சியைச் சேர்ந்­தவர். கொழும்பு நாலந்தா கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான இவர் ஏ.எஸ்.பி. என பல­ராலும் அறி­யப்­பட்டார். ஒரு வர்த்­த­க­ரான இவர் 1989 இல்  ஏ.எஸ்.பி குழு­மத்தை நிறு­வினார். தனியார் நிறு­வ­ன­மான இதன் தலை­வ­ரா­கவும் நிர்­வாகப் பணிப்­பா­ள­ரா­கவும் செயற்­பட்டார். கட்டார் மற்றும் நைஜீ­ரி­யா­வுக்கு இலங்­கையின் தூது­வ­ராகச் செயற்­பட்டார். 2010, 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

கெட்­ட­கொட கமகே ஜயந்த பெரேரா

1960 இல் பிறந்த இவர் சுயேச்சை வேட்­பா­ள­ராவார். கொழும்பு – லும்­பினி கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். திரை மற்றும் தொலைக்­காட்சி நிறு­வன டிப்­ளோமா சான்­றி­தழைப் பெற்­ற­வ­ராவார். கடு­வல பிர­தே­ச­ச­பைக்கு 1991 இல் தெரி­வான இவர் 1997 இல் அதன் எதிர்க்­கட்சி தலை­வ­ரானார். 2000 ஆம் ஆண்டில் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரானார். 2013 ஆம் ஆண்டு சரத் பொன்­சேகா சிறையில் அடைக்­கப்­பட்­ட தைத் தொடர்ந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வானார்.

துமிந்த நாக­முவ

முன்­னிலை சோச­லிச கட்­சியைச் சேர்ந்த இவர் 1980 ஆம் ஆண்டு பிறந்தார். ஒல­பொ­டுவ மகா வித்­தி­யா­லயம், இசிப்­பத்­தான மகா வித்­தி­யா­ல­யத்தின் பழைய மாண­வ­ராவார். தெல்­தெ­னிய பல்­க­லைக்­க­ழ­கத்தின் விஞ்­ஞான பீடத்­திற்கு தெரி­வான இவர் பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் வெளியேற்­றப்­பட்­ட­தினால் பட்­டப்­ப­டிப்பை பூர்த்தி செய்ய முடி­ய­வில்லை. 2002 இல் ஜே.வி.பியுடன் இணைந்து கொண்டார். 2004 –2008 வரை உள்­ளக பல்­க­லைக்­க­ழக மாணவர் சம்­மே­ள­னத்தில் அங்­கத்­துவம் வகித்தார். ஜே.வி.பி சார்பில் 2009 இல் மாகாண சபைத்­தேர்­தலில் போட்­டி­யிட்டார். 2015 ஆம் ஆண்டு முன்­னிலை சோச­லிச கட்­சியில் இணைந்து கொண்டார். 2015 இல் இடதுசாரி கட்­சி­களை சேர்த்துக் கொண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டார். 2017 முதல் முன்­னிலை சோச­லிசக் கட்­சியின் பிர­சார செய­லா­ள­ராக பணி­யாற்றி வரு­கிறார்.

கலா­நிதி அஜந்தா விஜே­சிங்க பெரேரா

இலங்கை சோச­லிச கட்­சியைச் சேர்ந்­தவர். 1957 இல் பிறந்­தவர். விசாகா வித்­தி­யா­ல­யத்தின் பழைய மாண­வ­ரான இவர் சென்னை குட்­செபட் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். லண்டன் ஹரோ கல்­லூ­ரியில் உயர்­தர கல்­வியைப் பெற்றார். லண்டன் சீபீல்ட் பல்­க­லை­க்க­ழ­கத்தில் இள­மா­ணிப்­பட்டம் பெற்ற இவர் ஜேர்மன் முனிஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் முது­மாணிப்­பட்­டத்தை 1987 இல் பெற்றுக்கொண்டார். ஜேர்­மனி முனிஜ் லுட்விக் மெக்ஸ்­மினன் பல்­க­லைக் க­ழ­கத்தில் சூழ­லியல் சம்­பந்­த­மாக 1992 இல் கலா­நிதி பட்டம் பெற்றார். கழிவு முகா­மைத்­துவம் தொடர்பில் சுற்­று­சூழல் அமைச்­சுக்கு ஆலோ­ச­க­ரா­கவும் பதவி வகித்­துள்ளார்.

சந்­தி­ர­சே­கர ஹேரத் ஹிட்­டி­ஹாமி கோரா­ள­லாகே சமன்ஸ்ரீ ஹேரத்

1963 ஆம் ஆண்டு பிறந்த இவர் சுயேச்சை வேட்­பா­ள­ராவார். சிலாபம், ஹெல­கம அடி­பால வித்­தி­யா­ல­யத்தின் பழைய மாண­வ­ராவார். புத்­தளம் மாவட்ட ஜே.வி.பி.யின் முன்னாள் பிர­தம அமைப்­பா­ள­ராவார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் போட்­டி­யிட்டு 2004 இல் தெரி­வானார்.

அஷோக வடி­க­மங்­காவ

சுயேச்சை வேட்­பா­ள­ரான இவர் 1952 இல் பிறந்தார். ஆன­ம­டுவ மகா வித்­தி­யா­லயம், பன்­னிப்­பிட்­டிய தர்­ம­பால வித்­தி­யா­லயம் ஆகி­ய­வற்றின் பழைய மாண­வ­ரான இவர் உயர்­தர கற்­றையின் பின்னர் சட்ட கல்­லூ­ரிக்கு பிர­வே­சித்தார். ஐ.தே.க. சார்பில் இடைத்­தேர்­தலில் போட்­டி­யிட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வானார். 1989 இல் காணி இரா­ஜாங்க அமைச்­ச­ரான இவர் 1990 இல் காணி அமைச்­ச­ராகச் செயற்­பட்டார். 2018 இல் சு.க சார்பில் புத்­தளம் மாவட்ட அமைப்­ப­ள­ராக நிய­மனம் பெற்றார்.

ஆரி­ய­வங்ச திஸா­நா­யக்க

ஜன­நா­யக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச் சேர்ந்­தவர். அவி­சா­வளை சீதா­வக்க மகா வித்­தி­யா­ல­யத்தின் பழைய மாண­வ­ராவார். மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் மின்­னியல் மற்றும் தொலைத்­தொ­டர்பு டிப்­ளோமா பட்டம் பெற்­றவர். இங்­கி­லாந்து கென்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதி முது­மாணிப் பட்டம் பயின்று வரு­கிறார். 2004 இல் இலங்கை டெலி­கொம்மின் பொறி­யி­ய­லா­ள­ராகக் கட­மை­யாற்­றி­யுள்ளார். 1985 இல் அர­சி­யலில் பிர­வே­சித்தார். சு.க சார்பில் 1989 இல் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டார். 1999 இல் மத்­திய மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரானார்.

நம்­பு­நாம நாண­யக்­கார  அக்­மீ­மன பள்­ளி­யங்­கு­ருகே வஜி­ர­பானி விஜ­ய­ஸ்ரீ­வர்­தன

சோச­லிச சம­வு­டமைக் கட்­சியைச் சேர்ந்­தவர். 66 வய­தான இவர் மாத்­தறை இரா­குல கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் விஞ்­ஞான பட்­ட­தா­ரி­யான இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசி­ரி­ய­ராவார். சோச­லிச சம­வு­டமைக் கட்­சியின் அர­சியல் குழு உறுப்­பி­ன­ராவார். ஆசி­ரியர் போராட்­டங்­களின் போது பல­ராலும் அறி­யப்­பட்­டவர். சினி­மாத்­து­றை­யிலும் இவர் பிர­பல்­ய­மா­னவர்.

பெத்தெ கமகே நந்­தி­மித்ர 

நவ சம­ச­மாஜக் கட்­சியைச் சேர்ந்த இவர் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். கலு­போ­வில மகா வித்­தி­யா­லயம், கெஸ்­பாவ மகேந்­திர ஸ்ரீசுதர்­ஷன வித்­தி­யா­லயத்தின் பழைய மாண­வ­ராவார். 1989 இல் நவ சமா­ஜக் கட்­சியில் இணைந்து கொண்டார்.

அப்­ப­ரெக்கே புஞ்­ஞா­னந்த தேரர்

1955 இல் பிறந்த இவர் சுயேச்சை வேட்­பா­ள­ராவார். அபே­ரெக்க மகா வித்­தி­யா­ல­யத்தின் பழைய மாண­வ­ராவார். 1974 இல் துற­வறம் பூண்டார். மீரி­கம பமு­னு­வத்த மொர­கஸ்­வெவ ஸ்ரீ விவே­க­ராம விகா­ரையின் பிர­தம தேர­ராவார். ஜாதிக ஹெல உறு­மய சார்பில் 2004 பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வானார்.

விஜே­நா­யக்க கங்­கா­னம்கே பிய­சிறி விஜே­நா­யக்க

1964 இல் பிறந்த இவர் சுயேச்சை வேட்­பா­ள­ராவார். களனி பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­யாவார். 1977 இல் ஹொரண பிர­தேச சபை உறுப்­பி­ன­ராவார். 1999 –2004 மேல் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ராவார். 2000 ஆம் ஆண்­டிலும் 2001 ஆம் ஆண்­டிலும் களுத்­துறை மாவட்ட பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்டார். 2001 இல் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வானார்.

அருண டி சொய்சா

ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியைச் சேர்ந்த இவர் 1962 இல் பிறந்தார். பெலப்­பிட்­டிய ரெவத்த மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி கற்ற இவர் 1982 இல் கணித ஆசி­ரி­ய­ராக அங்கு பணி­பு­ரிந்தார். 1989 ஜே.வி.பி. கிளர்ச்­சியின் போது கைது செய்­யப்­பட்டு 1992 இல் விடு­தலை செய்­யப்­பட்டார். 1994 இல் காலி மாவட்ட ஜே.வி.பி. தலை­வ­ராகச் செயற்­பட்டார். 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

ஜயந்த லிய­னகே

சிங்­கள தீப ஜாதிக பெர­மு­னவைச் சேர்ந்­தவர். 1957 இல் பிறந்தார். குரு­ணாகல் மலி­ய­தேவ கல்­லூரி, கொழும்பு நாலந்தா கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். லண்டன் கிங்ஸ்டன் கல்­லூரி மாண­வ­ராவார். 1992 முதல் மின்­னியல் பொறி­யி­ய­லா­ள­ராக கட­மை­யாற்றி வரு­கிறார். பூமி­புத்­திர கட்­சி­யுடன் 1997 இல் இணைந்து கொண்டார். குரு­ணாகல் மாந­க­ர­சபை தேர்­தலில் போட்­டி­யிட்டார். 2000 ஆம் ஆண்டில் சிஹல உறு­மய சார்பில் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

பேரா­சி­ரியர் ரஜீவ விஜ­ய­சிங்க 

65 வய­தான இவர் சுயே ச்சை வேட்­பா­ள­ராவார். ஆங்கி மொழியில் ஒக்ஸ் போர்ட் பல்­க­லைக்­க­ழகத் தில் கலா­நி­திப்­பட்டம் பெற் றார். 80 களில் அர­சி­யலில் பிர­வே­சித்தார். மாகாண சபைத் தேர்­தலில் லிபரல் கட்சி சார்­பாக 1988 இல் போட்­டி­யிட்டார். 1999 ஜனா­தி­பதித் தேர்தல் 2000 ஆம்­ ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டார். சமா­தான செய­ல­கத்தின் செய­லாளர் நாய­க­மாக 2007 இல் நிய­மனம் பெற்றார். 2010 இல் பாரா­ளு­மன்றம் சென்றார்.

பத்­த­ர­முல்ல சீல­ரத்ன தேரர்

ஜன­சத பெர­மு­னவைச் சேர்ந்­த­வ­ராவர். 1968 இல் பிறந்தார். கதிர்­காமம் காவன் திஸ்ஸபுர தம்ம விஜய விகா­ரையின் பிர­தம தேர­ராவார். 2006 ஆம் ஆண்டில் அர­சி­யலில் பிர­வே­சித்த இவர் 2008 இல் ஜன­சத பெர­மு­னவை தாபித்து அதன் தலை­வ­ரானார். 2010, 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

இல்­லியாஸ் ஐத்­துரோஸ் மொஹமட் 

1945 ஆம் ஆண்டு பிறந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வானார். 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

அஜந்த டி சொய்சா

ருஹூணு ஜனதா பெர­முன கட்­சியைச் சேர்ந்­தவர். அக்­கட்­சியின் ஸ்தாப­ரா­கவும் உள்ளார்.

அஹமட் அசான் மொஹமட் அலவி

இவர் சுயேட்சை வேட்பாளர்

வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சேலாகே சரத் விஜித குமார

சுயேச்சை வேட்பாளரான இவர் கிந் தேல்பிட்டிய வெல்மில்ல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா

ஐக்கிய சோசலிச கட்சி சார்பில் இவர் போட்டியிடுகிறார்.

பிரியந்த முனிஹத் எதிரிசிங்க 

கண்டியைச் சேர்ந்த இவர் அனைவரும் மக்கள் அனைவரும் அரசர் என்ற அமைப் பின் கீழ் போட்டியிடுகிறார்.

நாமல் ராஜபக்ஷ

தெஹிவளையை சேர்ந்த இவர் தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடு கின்றார்.

எம்.கே.சிவாஜிலிங்கம்

1957 இல் பிறந்த இவர் இம்முறைத் தேர்தலில் சுயே ச்சையாகக் களமிறங்கவுள் ளார். 2001 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் வேட் பாளராக யாழ்ப்பாண மாவ ட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதற் தடவையாக பாராளுமன்றம்  சென் றார். 2004 இல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 இல் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லாஹ்

1963 ஆம் ஆண்டில் பிறந்த இவர், 2010 பொதுத் தேர்த லில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரி வானார். பின்னர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளு மன்றத்துக்கு தெரிவானார். 2018 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி யேற்றார். இவ் வருடம் சுயேச்சையாக தேர்  தலில் போட்டியிடுகின்றார்.

சுப்ரமணியம் குணரத்தினம்

எமது தேசிய முன்னணி சார்பில் போட்டி யிடும் இவர் கோட்டே பிரதேசத்தை சேர்ந்தவராவார்.