ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் நாளை

184 0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்று இரவு ஒன்றுகூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று காலை 11 மணியளவில் விஷேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அது நாளை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.