சஜித் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது !

212 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் “அன்னம்” சின்னத்தின் கீழ் சஜித் பிரேமதாச போட்டியிடுவதற்கே இவ்வாறு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான செலவாக சுமார் 4500 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இந்த தொகை உயர்வடையும் என்றும் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.