நாளை கூடுகிறது பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு

229 0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிக்கையை இறுதிப்படுத்துவது குறித்து ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை கூடுகின்றது.

இம்மாதம் இரண்டாம் வார பாராளுமன்ற அமர்வுகளின் போது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்குழு தெரிவிக்கின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திருக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அதன் விசாரணைகளை முழுமைப்படுத்தியுள்ள நிலையில் விசாரணைகளின் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு அது குறித்து ஆராய நாளை தினம் தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.