கந்தர பகுதியில் மிருக வேட்டைக்காக சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்குண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கந்தர – குருந்துவத்த பகுதி வயல்வெளியில் புதன்கிழமை ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய புத்திக்க மஹேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக இணைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரத்தில் சிக்குண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு மின் இணைப்பை தயாரித்து வைத்த சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.