பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

242 0

பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கியை செயற்படுத்தும் ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான  சி.சி.ரி.வி. காணொளி அந்தக்காலப்பகுதியில் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

குறித்த காணொளியில் பொலிஸ்மா அதிபர் மின்தூக்கி ஊழியரின் சட்டடையை பிடித்து உலுக்கி, மிரட்டும் தொனியில் நடந்துகொள்வதும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார், இன்று (01)  கைதுசெய்துள்ளனர்.