வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கிய யுவதி

215 0

எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாவல, ரொசலின்வத்த பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி யுவதி, 17 வயதுடையவரென்றும், அவரின் வீட்டின் கூரையில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்றின் உதவியுடன் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த யுவதியின் சடலம் எஹலியகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில், எஹலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.