மட்டு. தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் சடலம் மீட்பு!

263 0

மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றுக்குள் இருந்தே இன்று (திங்கட்கிழமை) காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் பொதுமக்களினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சடலம் விசாரணைகளை தொடர்ந்து மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தினை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.