உயிரிழந்த மாணவர்களுக்கு 1கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்க வேண்டும்-சிவாஜிலிங்கம்(காணொளி)

381 0

sivajilingam-voiceயாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 1 கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் 64வது அமர்வில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் இக்கருத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்தார்.

அத்துடன் நடந்த சம்பவத்திற்கு நீதியான விசாரணை நடாத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் சபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கொலை தொடர்பான நீதி தாமதிக்கப்படுமாயின், அரசு இயந்திரத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலைக்கு செல்ல வேண்டிவரும் என்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.