கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது !

262 0

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை நேற்று சனிக்கிழமை(28) இரவு கைது செய்ததுடன் 1500 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திசெய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

 

பொலிஸ் பலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பிரதேசத்தில் உள்ள வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர் இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர் .

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25, மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் இவர்களிடம் இருந்து1500 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திசெய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை மீட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.