நான்கு பிள்ளைகளின் தாய் தீ மூட்டி தற்கொலை

413 0

fire 58484குடும்ப தக­ராறு கார­ண­மாக ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற நான்கு பிள்­ளை­களின் தாய் தனது உடலில் பெற்­றோலை ஊற்றி தனக்­குத்­தானே தீ மூட்டி மர­ண­ம­டைந்­துள்ளார். மேற்­படி சம்­பவம் பரந்தன் ஊரி­யானில் இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வாறு மர­ண­மா­னவர் பேரின்­ப­நா­யகம் மேரி­ர­ஜீனா (வயது 42) என்­ப­வ­ராவார்.மேற்­படி சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,கடந்த 24ஆம் திகதி குடும்பத் தக­ராறு கார­ண­மாக மேரி­ர­ஜீனா என்ற குடும்பப் பெண் ஆத்­தி­ரத்தில் உடலில் பெற்­றோலை ஊற்றி தனக்­குத்­தானே தீமூட்டி எரி­யுண்ட நிலையில் கிளி­நொச்சி மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

இவர் பின்னர் சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலையில் நேற்று காலை மர­ண­மானார். இவ­ரது மரண விசா­ர­ணையை கிளி­நொச்சி மரண விசா­ரணை அதி­காரி டாக்டர் க.திருலோகமூர்த்தி மேற்கொண்டு தற்கொலை மரணம் என தீர்ப்பு வழங்கினார்.

Leave a comment