தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; இரு பெண்கள் பலி ; மூவர் படுகாயம்

328 0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் ஒன்று அதற்கு முன்னால் பயணித்த லொறியொன்றுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜீப் வாகனத்தில் சாரதியும் அதில் பயணித்த நான்கு பெண்களும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த சாரதியும் பெண்ணொருவரும் நாகொடை வைத்தியசாலையிலும், 2 பெண்கள் பண்டாரகம வைத்தியசாலையிலும், மேலும் ஒரு பெண் ஹொரணை வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, பண்டாரகம வைத்தியசாலை மற்றும் நாகொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் லொறியின் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.