சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதுவர் மன்னார் விஜயம்

352 0

சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின்  புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு நேற்று  புதன் கிழமை  (25.09.2019) வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று  புதன் கிழமை காலை  மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகைதந்த தூதரகத்தின் தூதுவர், சுவீஸ் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும்   சுவிஸ் தூதரகத்தின் அரசியல் பிரிவிற்கான தலைமை பிரதிநிதி ஆகியோர்  மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை   அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

இச்  சந்திப்பில்  மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்திகளின் நிலைப்பாடுகள், அரசியலின் நிலைப்பாடுகள், பொருளாதார நிலைப்பாடுகள் நிலவரங்கள் குறித்தும், கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.