கஞ்சிபான இமரானின் விளக்கமறியல் நீட்டிப்பு

192 0

பொலிஸ் அதிகாரிகளுக்கு அலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இமரானின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க இன்று (20) உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, அரச பகுப்பாய்வு திணைக்களத்தால் கஞ்சிபான இம்ரானின் குரல்பதிவு நேற்று (19) பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.