சர்வதேச நீதிபதிகளை அனுமதியுங்கள்

449 0

HRC-3-450x253ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பானவிவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்­றிய சர்­வ­தேச நாடுகள் மற்றும் சர்­வ­தேசமனித உரி­மைகள் அமைப்­புகள் அனைத் தும் இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு மிகவும் கட்­டா­ய­மாக இடம்­பெற வேண்­டு­மென வலி­யு­றுத்­தின.

அமெ­ரிக்கா, நெதர்­லாந்து, கனடா, ஜப் பான், நோர்வே, அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­ லாந்து, கொரியா உள்­ளிட்ட நாடு­களும் சிறு­பான்மை உரி­மைக்­கான அமைப்பு, சர்­வ­தேசயூரிகள் ஆணைக்­குழு, அனைத்­து­வி­த­மான அநீ­தி­க­ளுக்­கு­மான அமைப்பு உள்­ளிட்ட தரப்­புக்­களும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை நேற்றுஜெனி­வாவில் வலி­யு­றுத்­தின.

முதலில் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசேயின் தனது அறிக்­கையை வெ ளியிட்­டதன் பின்னர் இலங்­கையின் சார்பில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை­யாற்­றினார். அதன் பின்னர் சர்­வ­தேச நாடுகள் மற்றும் அமைப்­புகுள் பிர­தி­நி­தி­களும் உரை­யாற்­றினர்.

கனடா
கனடா நாட்டின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்­பான வாய் மூல அறிக்­கையை வர­வேற்­கிறோம். பிரே­ரணை ஊடாக இலங்கை அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற ஊக்கு விக்­கிறோம்.
குறிப்­பாக நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூரல் செயற்­பாட்டின் இலங்கை அர­சாங்­க­ததை ஊக்­கு­விக்­கிறோம். அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டமை காணிகள் விடு­விக்­கப்­ப­டு­கின்­றமை போன்­ற­வற்றில் முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­றது. எனினும் இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்­ளது.

பொறுப்புக் கூறல் முறை­யா­னது சுயா­தீ­ன­மாக இருக்க வேண்டும். அதில் அர்த்­த­முள்ள சர்­வ­தேச பங்­க­ளிப்பும் அமை­வ­தா­னது பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நம்­பிக்கைக் கொள்ள செய்யும். கனடா இலங்­கைக்கு உத­வு­வ­தற்கு தயா­ராகி இருக்­கி­றது என்றார்.

ஜப்பான்

இந்த அமர்வில் ஜப்பான் நாட்டின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில் இலங்­கையின் உள்­ளக விசா­ர­ணையின் பொறி­மு­றையில் சர்­வ­தேச பங்­க­ளிப்பும் ?அவ­சி­ய­மா­ன­தாகும். இது மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­கது. இதற்­காக ஜப்பான் இந்த செயற்­பாட்டில் பங்­கேற்­ப­தற்­காக சட்­டத்­த­ரணி ஒரு­வரை வழங்­கு­வ­தற்கு தயா­ராகி இருக்­கி­றது என்றார்.

அமெ­ரிக்கா
இந்த விவா­தத்தில் ஜெனி­வா­வுக்­கான அமெ­ரிக்க தூதுவர் கி.ஹார்பர் உரை­யாற்­று­கையில்இலங்­கையின் தற்­போது அடை­யப்­பட்­டுள்ள முன்­னேற்றம் குறித்து மகிழ்ச்சி அடை­கிறோம். ஆனால் நீதி பொறி­மு­றையில் இன்னும் பல படிகள் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. இதற்கு தேவை­யான முழு­மை­யான உத­வி­களை செய்­வ­தற்கு அமெ­ரிக்கா தயா­ராகி இருக்­கி­றது என்றார்.

டென்மார்க்
டென்மார்க் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்இலங்கை அர­சாங்கம் மனித உரிமை பாது­காப்பு சிவில் சமூக பாது­காப்பு என்­ப­வற்றில் முன்­னெ­டுத்­து­வரும் செயற்­பா­டு­களை பாராட்­டு­கிறோம். காணாமல் போனோர் விவ­காரம் மற்றும் விசேட ஆணை­யாளர் விட­யத்தில் இலங்­கையின் அர்ப்­ப­ணிப்பை பாராட்­டு­கின்றோம். எனினும் இலங்­கை­யினால் பிரே­ரணை அமு­லாக்­கத்தில் இன்னும் பல வேலைத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பாட்டில் சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென இலங்­கையை டென்மார்க் வலி­யு­றுத்­து­கி­றது.வடக்கு கிழக்கு மனித உரிமை செயற்­பாட்டில் முன்­னேற்­ற­க­ர­மாக செயற்­ப­டு­மாறு கோரிக்கை விடுக்­கிறோம் என்றார்.

நோர்வே
இந்த விவா­தத்தில் நோர்வே நாட்டின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்கடந்த வருடம் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை அமு­லாக்­கு­வதில் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள வேலைத் திட்­டங்­களை வர­வேற்­கிறோம். கடந்­த­வாரம் இலங்கை வெ ளிவி­வ­கார அமைச்சர் நோர்வே வந்­தி­ருந்­த­போது பல விட­யங்­களை பகிர்ந்­து­கொண்டார். தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­க­மா­னது நல்­லி­ணக்­கத்தின் பல்­லினத் தன்­மையை அடை­யு­மென நம்­பு­கிறோம். அது மட்­டு­மன்றி உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­கான பொறி?முறையில் பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச நாடு­களின் நீதி­ப­திகள் வழக்­க­றி­ஞர்கள் விசா­ர­ணை­யா­ளர்­கள்இ மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் இடம்­பெற வேண்­டு­மென வலி­யு­றுத்­து­கின்றோம்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்­டோரின் பங்­க­ளிப்­புடன் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்

இலங்கை இன்னும் ஆரம்ப கட்­டத்­தி­லேயே பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது. இன்னும் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் அர்ப்­ப­ணிப்­புகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளன. பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க பொறி­மு­றையில் சர்­வ­தேச பங்­க­ளிப்பு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தையும் நீக்­கு­மாறு நாம் வலி­யு­றுத்­து­கிறோம்.

வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்­கையை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் சிவில் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­று­மாறும் காணி­களை மீள வழங்­கு­மாறும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கிறோம் என்றார்.

அவுஸ்­தி­ரோ­லியா

அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள முன்­னேற்­றத்தை வர­வேற்­கின்றோம். ஆனால்இ நல்­லி­ணக்க செயற்­பா­டு­களின் விரை­வான நடை­முறை அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­து­கின்றோம் என்றார்.

நியூ­ஸி­லாந்து

நியூ­ஸி­லாந்து நாட்டின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில்இலங்கை பல முன்­னேற்­றங்­களை வெளிக்­காட்­டி­யுள்­ளது. இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் பொறுமை செயற்­பாட்டின் சர்­வ­தேச நாடு­களின் நிதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு மிகவும் அவ­சி­ய­மா­னது என்­பதை வலி­யு­றுத்­து­கின்றோம் என்றார்.
.
அனைத்து வித­மான அநீ­தி­க­ளுக்கும் எதி­ரான அமைப்பின் பிர­தி­நிதி உரை­யாற்­று­கையில் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்கி அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்­டிய அரசாங்கத்தை பாராட்டுகின்றோம். காணி மீள் வழங்குவதில் ஏற்படும் தாமதம் பாதுகாப்பு மறு சீரமைப்பு குறைபாடுஇ குற்றவாழிகள் தண்டிக்கப்படாமல்இ பயங்கரவாத தடைச் சட்டம் நீடிக்கப்படுகின்றமைஇ தமிழ் மக்கள் சித்திரவதைக்கு உள்ளாகின்றமைஇ அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தாமதம் என்பன காணப்படுகின்றன.

எனவே அரசியலமைப்பு மறுமைசீரமைப்பானது அரசியல் தீர்வு குறித்து கட்டாயமாக அவதானம் செலுத்த வேண்டும். அதிகாரப் பகிர்வு மாதிரி ஒன்று இதில் ஆராயப்பட வேண்டும்.உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு என்பது அவசியமானது என்பதையும் வலியுறுத்தி கூறுகின்றோம். சர்வதேச பங்களிப்பானது பிரேரணை அமுலாக்கத்தை வெற்றியடைச் செய்யும் என்றார்.

Leave a comment