நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்க முயல்­வது வேடிக்கை- டலஸ்

309 0

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யினை  இரத்து செய்­வ­தற்கு அர­சாங்கம் அமைச்­ச­ர­வையில் யோச­னை­யினை முன்­வைக்­க­வுள்­ளது. நாட்டு மக்­களை அர­சியல் ரீதியில் ஏமாற்றும் ஒரு செய­லா­கவே இது கரு­தப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி தேர்தல் இடம் பெற­வுள்ள நிலையில், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யினை இரத்து செய்ய முயல்­வது நகைப்­புக்­கு­ரி­யது என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டுகருத்­து­ரைக்­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது எழுந்­துள்ள தேசிய பிரச்­சி­னைக்கு ஜனா­தி­பதி தேர்­தலின் ஊடா­கவே  தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே அனைத்து தரப்­பி­னரின் கவ­னமும் ஜனா­தி­பதி தேர்­தலின் வெற்­றியை இலக்­காகக் கொண்­டுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு பல்­வேறு வழி­களில் முயற்­சி­களை மேற்­கொண்­டது. இன்று அனைத்து முயற்­சி­களும் தோல்­வி­ய­டைந்­துள்­ளன.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் அறி­விக்க உள்ள நிலையில்  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யினை இரத்து செய்­வ­தற்­கான யோசனை அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜனா­தி­பதி தேர்தல் இடம் பெற­வுள்ள நிலையில் , நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யினை இரத்து செய்ய முயல்­வது பய­னற்­ற­தாகும்.

ஜனா­தி­பதி தேர்­தலை இலக்­காகக் கொண்டு அர­சாங்கம் தற்­போது அரச வளங்­களை  தமது தேவைக்­கேற்ப  பயன்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றது.அர­சியல் ரீதி­யி­லான நிய­ம­னங்கள், பதவி உயர்­வுகள் ஆகி­யன வழங்­கப்­ப­டு­கின்­றன.  இவ்­வா­றான செயற்­பா­டுகள்  தேர்தல் தொடர்பில் மக்­களின் சிந்­த­னை­களை திசை ­தி­ருப்­பு­வ­தா­கவே அமையும். ஆகவே இவ்­வி­டயம் தொடர்பில்  தேர்­தல்­கள் ஆ­ணை­யாளர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இவ் ஊ­ட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ ­லிய ரம்­புக்­வெல குறிப்­பி­டு­கையில்,

அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட வேண்­டு­மாயின் ஐக்­கிய தேசிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளி கட்­சி­களின் ஆத­ரவு  அவ­சியம் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்­ளமை கவனத்­திற்­கு­ரி­யது.

ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்யும் போது கட்­சியில் அங்­கத்­துவம் செலுத்தும் அனைத்து தரப்­பி­ன­ரது ஆத­ர­வி­னையும் பெற வேண்­டி­யது அவ­சியம். ஆனால் தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவின் நிலைப்­பாடு அவ்­வாறு அல்ல. ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் பங்காளிக் கட்சிகள் அனைத்தின் கோரிக்கைக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். இது எவ்வாறு சாத்தியப்படும். ஆளும் தரப்பி னரது முறையற்ற செயற்பாடுகள் இனங் களுக்கிடையில்  பிளவினை ஏற்படுத்தும் விதமாகவே அமைகின்றன என்றார்.