வடக்கு,கிழக்கில் பாரிய அபிவிருத்தி-சஜித்

215 0

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலை தொடர்பில் மகிழ்ச்சி அடைய முடியாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டு மக்கள் என்னை அதிகாரத்திற்கு கொண்டு வரும் போது, எனது முதலாவது செயற்பாடாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கேந்திரமாக கொண்டு பாரிய அபிவிருத்தி ஒன்று முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.