‘அனுமதியின்றியே கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டது’

221 0

தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் அனுமதியளிக்கப் போவதில்லையென, விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ​ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.