இராணுவ சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை

269 0

பிலியந்தலை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுவந்தர பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இராணுவ சிப்பாய் ஒருவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய  பண்டாரநாயக்க முதியன்சேலாகே சஞ்சிக பிரபாத் ராஜபக்ஷ என்ற இராணுவ அதிகாரியின் பாதுகாப்பு பிரிவிற்கு இணங்க பணிபுரிந்து வந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிப்பாய் காதல் பிரச்சினையின் காரணமாகவே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சடலம் களுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.