வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

248 0

ஏ 9 வீதியின் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று மாலை  4.00 இடம்பெற்ற வாகன விபத்தில் இளங்குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸில் மோட்டார்ச் சைக்கிள் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவரை அம்பியூலன்ஸ் வண்டியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்த இளங்குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன