கொழும்பு – தாமரைக்கோபுர கட்டடத் தொகுதிக்காக உத்தேச வணிகமய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தாமரை கோபுரத்திட்டத்தை பூர்த்தி செய்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவிடம் விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் துணைநலன்களை இலங்கை மக்கள் அனுபவிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்று இதனை வணிக செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக விரைவில் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான தேவை உணரப்பட்டுள்ளது.
இதனால் இதற்கான பணிகளின் முகாமைத்துவத்துக்காக அரசாங்கத்துக்கான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கென திறைசேரிக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.