சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

288 0

பதவிய – க்ரெவல்கந்த பிரதேசத்தின் வனப்பகுதியிலிருந்து சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை சென்ற நபர் ஒருவர் குறித்த சடலத்தைக் கண்டுள்ள நிலையில், பதவிய பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து தேசிய அடையாள அட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

64 வயதுடைய தீகல பிரதேசத்தைச் சேர்ந்த எல்பிடியே கெதர ராஜபக்ஷ என்ற பெயருடைய பெண் ஒருவரின் அடையாள அட்டையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த அடையாள அட்டை உயிரிழந்தவருடையதா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.