ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் அரச ஊழியர் ஒருவரும் குருணாகலில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்தும் இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 10 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

