கம்பெரலிய செயற்திட்டம் அரசியல் பிரச்சாரம் – பந்துல

269 0

கம்பெரலிய செயற்திட்டத்தின் ஊடாக மக்களுக்க அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அரசியல் பிரச்சாரமே முன்னெடுக்கப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்களுக்கு அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு  கம்பெரலிய செயற்திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. தேர்தல் மற்றும் தனி  விளம்பரப்படுத்தலே இதனூடாக முன்னெடுக்கப்படுகின்றது.

செயற்திட்டத்தின் விளம்பரப்படுத்தலுக்கும், பிரச்சார நடவடிக்கைளுக்கும் மாத்திரம் பாரிய நிதி  இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு  முறையான  அபிவிருத்திகள் இத்திட்டத்தின் ஊடாக  கிடைக்கப் பெறவில்லை. மக்களின் நிதி அரசியல் சுய தேவைகளுக்காக வீண்விரயம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் விரைவில் முறைப்பாடு செய்வேன் என்றும் அவர் கூறினார்.