சஜித்தை வேட்பாளராக நியமிக்காவிட்டால், பலர் அரசியலுக்கு விடை கொடுக்கலாம்-ஹேஷா விதானகே

390 0

இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காவிட்டால், ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சிலரும் அரசியல் வாழ்க்கைக்கு விடை கொடுக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

இரத்னபுரியில் உள்ள கோடகவெல பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக கிராமங்கள் தோறும் ஐக்கிய தேசிய கட்சிக்காக உழைத்தவர்களை நிர்கதியாக்கும் வகையில் நாம் செயற்படாது, அவர்களுக்காக பதவிகளை கூட எதிர்பார்காது, அவர்களுக்கு நல்ல ஒரு சூழ்நிலையை உருவாக்குவோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.