தம்புள்ள – திகம்பதல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது.
அரச பேருந்தொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை தம்புள்ள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.