ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம், நேதாஜியின் மகள் அனிதா போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாத்மா காந்திக்கு இணையான தேச தலைவராக போற்றப்படுபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வெளிநாட்டில் இருந்தபடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
அப்படிப்பட்ட தேச தியாகிகளுள் ஒருவரான நேதாஜி, கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாகவும், அவர் உடல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், நேதாஜி மரணம் அடையவில்லை என்று அவருடைய சகோதரரும், குடும்பத்தினரும் கூறினார்கள். அவர் தலைமறைவாக இருப்பதற்காக இறந்து விட்டதாக செய்தி பரப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
இது சம்பந்தமாக பல விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனாலும் நேதாஜி விமான விபத்தில் இறந்தாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து நேதாஜியின் மகளான அனிதா போஸ் கூறுகையில், ‘ஜப்பானில் உள்ளதாக கூறப்படும் நேதாஜியின் சாம்பலை எடுத்து அதை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக இந்திய அரசும், ஜப்பான் அரசும் உரிய முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் நேதாஜி மரணத்தின் மர்மம் விலகி விடும்.

