துருக்கி விமான நிலையத் தாக்குதல் – ஐ.எஸ் தரப்பினர் மீது குற்றச்சாட்டு

3192 0

1467160945867 (1)துருக்கியின் அத்தாடர்க் விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள், அரேபிய மொழில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிக்கும் வார்த்தைகளை பிரயோகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்னும் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை.

இந்த விமான நிலையத்தில் தற்கொலை குண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மூன்று தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

இதில் 3 இதுவரையில் 36 பேர் பலியானதுடன், மேலும் 147 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave a comment